15 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கு.. புதிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிகமாக உள்ளது. தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றது. நேற்று மட்டும் புதிதாக 60,212 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நிரம்பி வருகின்றன. 

கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. இதனால், முழு ஊரடங்குக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநில அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறிய போது, கொரோனா வைரசுக்கு எதிரான போர் மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மாநில அரசு உள்கட்டமைப்பு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு 8 மணி முதல் மே ஒன்றாம் தேதி காலை 7 மணி வரை 15 நாட்களுக்கு மாநிலம் தழுவிய மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டு, ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதேவேளை அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில் ஏழைகள் மற்றும் தேவையுள்ளோருக்கு தலா 3 கிலோ கோதுமையும், 2 கிலோ அரிசி அரசால் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

udhdhv thackeray says about people lockdown


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->