ராமநாதபுரம் || விபத்தில் உயிரிழந்த முதியவர் - பதற்றத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் || விபத்தில் உயிரிழந்த முதியவர் - பதற்றத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு நேர்ந்த கொடூரம்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, கமுதி அருகே பூமாவிலங்கை கிராமத்தை சோந்தவர் கல்யாணிதேவர். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கமுதி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ, எதிர்பாராதவிதமாக கல்யாணிதேவரின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், கல்யாணிதேவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த ஆட்டோ ஓட்டுநர்,  கல்யாணிதேவர் அவருக்கு தெரிந்தவர் என்பதால் இந்த விபத்து தொடா்பாக கல்யாணித்தேவரின் மகன் முனியாண்டிக்கு உடனடியாக கைப்பேசியில் தகவல் தெரிவித்தார். 

அதன் பின்னர், ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து பதற்றத்திலேயே தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு கமுதிக்கு வேகமாக ஒட்டி வந்தார். அப்போது, அரண்மனைமேடு அருகே அவரது ஆட்டோ நிலைகுலைந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி விரைந்து வந்த போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கமுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples died for accident in ramanathapuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->