வெள்ளத்தில் மூழ்கிய மும்பை நகரம்: முடங்கிய போக்குவரத்து சேவைகள்; அவஸ்த்தையில் பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 100 மி.மீ, மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பஸ், ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மும்பையில் நேற்று முதல் பரவலாக இடைவிடாத பெய்த கனமழை எதிரொலியாக நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. தொடர் மழை காரணமாக, மும்பை நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவியதோடு, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தின்படி நகரில் 100 மி.மீ., மழை பதிவாகி உள்ள நிலையில், நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் முறையே 58 மற்றும் 75 மி.மீ.மழை பெய்துள்ளது.

தானே, பால்கர், ராய்கட் ஆகிய பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையினால், மும்பையில் புறநகர் ரயில் மற்றும் பஸ் சேவை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மழையின் தாக்கம் காரணமாக, இண்டிகோ விமான நிறுவனம் அதன் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மும்பை நகரின் பல பகுதிகளில் தொடர் மழை காரணமாக, சாலை போக்குவரத்திலும் பாதிப்பு இருக்கிறது. எனவே, பயணிகள் தங்கள் விமானத்தின் புறப்பாடு மற்றும் வருகை தொடர்பான தகவல்களை முன்னரே அறிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Transport services disrupted due to floods in Mumbai city


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->