மின்சாரம் தாக்கி ஒரே வீட்டில் மூன்று வாலிபர் உயிரிழந்த சோகம்.!  - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி ஒரே வீட்டில் மூன்று பேர் வாலிபர் உயிரிழந்த சோகம்.! 

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் பஞ்சாரா ஹில்ஸ் அருகே ஷேக்பேட் பகுதியைச் சேர்ந்தவர் பத்தொன்பது வயது வாலிபர் அசன். இவர்   வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கி உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அசன் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து ஓடி போன மின்சாரம் பாய்ந்தது தெரியாமல் அவரது சகோதரர்கள் இருவரும் அண்ணனை காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். 

அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால், மூன்று பேரும் தண்ணீர் தொட்டிக்குள் மின்சாரம் தாக்கி துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். பல மணி நேரமாகியும் மகன்களைக் காணவில்லை என்று பதறி போய் பார்த்ததில் மூன்று பேரும் தண்ணீர்த் தொட்டிக்குள் இறந்து கிடந்துள்ளார்.

ஒரே நேரத்தில் மகன்கள் மூன்று பேரும் உயிரிழந்ததை கண்டு கதறி அழுதுள்ளார். இதையறிந்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்து மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் ஒரே வீட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three young man died in telungana for electric shock


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->