திடீரென ஏற்பட்ட தீ.! ஒரே வீட்டில் 3 பேர் உயிரிழந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திடீரென ஏற்பட்ட தீ.! ஒரே வீட்டில் 3 பேர் உயிரிழந்த கொடூரம்.!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மாவட்டம், இஸ்லாமாபாத் நகரில் உள்ள ரோஸ் என்கிளேவ் ராம்நகர் காலனியைச் சேர்ந்தவர்கள் தஜிந்தர் சிங்-நரிந்தர் கவுர் தம்பதியினர். இவர்களது மகன் தில்வன்ஷ். இவர்கள் மூன்று பேரும் வீட்டில் இருந்த நிலையில், வீட்டின் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்துள்ளது. 

இந்த தீ சிறிது நேரத்தில் வீடு முழுவதும் பரவியதால் வீட்டில் இருந்த மூன்று பேரும் தீயில் மாட்டிக்கொண்டு அலறித்துடித்தனர். ஆனால், இவர்களுடைய சத்தம் வெளியில் கேட்காததால் மூவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வீடு முழுவதும் கொழுந்து விட்டு எறிந்த தீயை பார்த்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். 

பலமணி நேரப்போராட்டத்திற்குப் பின்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதன் பின்னர் வீரர்கள் தீயில் கருகி உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மின் இணைப்பில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died in punjap for fire accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->