செல்பியால் நடந்த விபரீதம் - புதுமணத் தம்பதி உள்பட மூன்று பேர் பலி.! - Seithipunal
Seithipunal


செல்பியால் நடந்த விபரீதம் - புதுமணத் தம்பதி உள்பட மூன்று பேர் பலி.!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் சித்திக்-நவுபியா தம்பதியினர். புதுமண தம்பதியான இவர்கள் பள்ளிக்கால் என்ற பகுதியில் உள்ள உறவினரான அன்சில் என்பவருடைய வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர். அங்கு விருந்தை முடித்து விட்டு புதுமணத் தம்பதியினர் அன்று மாலை அருகில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டனர். 

அங்கு புதுமண தம்பதி ஆற்றின் கரையோரம் இருந்த பாறையின் மேல் நின்று 'செல்பி' எடுக்க முயன்றுள்ளனர். அப்போது இருவரும் திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்த அன்சில் உடனே அவர்களைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் ஆற்றில் மூழ்கினார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்சிலின் குடும்பத்தினர் புதுமண தம்பதியினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவல் படி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய மூன்று பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அன்சில் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் புதுமண தம்பதியினரின் உடல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மீட்புப் படையினரின் விடா முயற்சியால் நேற்று புதுமண தம்பதி உடல்கள் பாறை இடுக்கில் சிக்கியபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மீட்புப் படையினர் தம்பதிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples died drowned water for take selfie in kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->