காலிஸ்தான் பயங்கரவாதிகளால் பிரதமர் மோடிக்கு ஆபத்து?... தொலைபேசி மூலம் மிரட்டல்...! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய உயர் அலுவலகத்தில் புகுந்து மூவர்ண கொடியை அவமதித்தது, அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டங்களிலும், இந்து கோவில்கள் மீது தாக்குதல் என நாளுக்கு நாள் வெளிநாடுகளில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். இதனிடையே பிரதமர் மோடிக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து தொலைபேசி எண்ணிலிருந்து ஆஸ்திரேலியாவில் பிரதமர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும், மாநாட்டில் பங்கேற்கும் பிரதமரின் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலியா அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Threats to modi from khalistan terrorist over phone call


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->