அசாமின் நகோன் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ஓரே மாதத்தில் 07-வது முறை: பீதியில் மக்கள்..!
This is the 7th earthquake to hit Assam in a single month
அசாமின் நகோன் மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் திறன் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று, மதியம் 12:09 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது தேஸ்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அதாவது, தேஸ்பூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் 35 கிலோமீட்டர் ஆழத்தில், 26.28°N அட்சரேகை மற்றும் 92.71°E தீர்க்கரேகையுடன் மையப்பகுதி அமைந்திருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் அசாமில் ஏற்பட்ட 07 வது நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.
இதே பகுதில் கடந்த ஆகஸ்ட் 07 மற்றும் 08-ஆம் தேதி முறையே 3.8, 2.8 நிலநடுக்கம் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
This is the 7th earthquake to hit Assam in a single month