விருந்துக்கு சென்ற போது பரிதாபம்.! கணவன் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி "புதுப்பெண்" பலி...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண் முன்னே புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் இப்பாடி பகுதியில் சேர்ந்தவர் நவீன். இவருக்கும் குடிகே பகுதியை சேர்ந்த ஷோபா (25) என்பவருக்கும், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உறவினர் ஒருவர் விருந்துக்காக புதுமண தம்பதியான நவீன்-ஷோபாவை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இதனால் நவீனும், ஷோபாவும் மோட்டார் சைக்கிளில் ஒலேநரசிபுரா பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது நாகல்புரா கேட் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்ப்பாராதவிதமாக திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஷோபா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் நவீன் லேசான காயமடைந்தார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்து போலீசார், உயிரிழந்த ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The woman killed trapped under the wheel of the lorry in Karnataka


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->