#BREAKING || புதுச்சேரியில் பரபரப்பு.! இன்று நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் திடீர் தற்கொலை.!
The student who was about to write the NEET exam committed suicide in puducherry
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக தகுதி தேர்வான இளநிலை நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன்(18). இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி இருந்தார். ஆனால் ஹேமச்சந்திரன் குறைவான மதிப்பெண் பெற்றதால், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹேமச்சந்திரன் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த ஹேமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The student who was about to write the NEET exam committed suicide in puducherry