தலையில் உரல்கல்லை போட்டு தந்தை கொடூர கொலை...! மகனின் வெறிச்செயல்...! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மீது உரல் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் கங்காராஜு (55). இவரது மகன் சேத்தன் (28) பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவும் இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இருவரும் தூங்க சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை எழுந்த சேத்தன் வீட்டில் இருந்த உரல் கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் தலையில் போட்டுள்ளார். இதையடுத்து கங்காராஜுவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக கங்காராஜுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கங்காராஜு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கங்கா ராஜுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தந்தை, மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தந்தையின் தலையில் உரல் கல்லை போட்டு மகன் கொலை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மகன் சேத்தனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The son killed his father by throwing a stone on his head in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->