குழந்தையை கடிக்க முயன்ற நாய்... போராடி காப்பாற்றிய தாய்..! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அஸ்வதி. இவரது 4 வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது குழந்தையை பக்கத்து வீட்டில் வளர்த்து வரும் நாய் கடிக்க முயன்றுள்ளது. இதைப் பார்த்த அஸ்வதி, நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற முயன்ற போது, அந்த நாய் அஸ்வதியை கடித்துள்ளது. இருப்பினும் தாய் குழந்தையை நாயிடமிருந்து பத்திரமாக காப்பாற்றியுள்ளார்.

இதில் அஸ்வதியின் உடலில் பல்வேறு இடங்களில் நாய் கடித்ததால் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காயங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சூரியசைக்காக அஸ்வதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The mother saved the child for dog that tried to bite in kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->