மனைவியை கொடூரமாக கொன்று வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!
The husband brutally murder his wife and posted the status on WhatsApp in Karnataka
கர்நாடகா மாநிலத்தில் குடும்ப பிரச்சனையில் மனைவியை கொடூரமாக கொன்று வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள நாகமலை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனிராஜ். இவருடைய மனைவி லட்சுமி. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவரை பிரிந்து லட்சுமி தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியின் வீட்டிற்கு சென்ற முனிராஜ் அவரிடம் குடும்பத் தகராறு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முனிராஜ் கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மனைவிய லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மனைவி இறந்து கிடப்பதை செல்போனில் படம் எடுத்து முனிராஜ் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு அவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் முனிராஜ் குடும்ப தகராறில் மனைவியை கொன்று, அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The husband brutally murder his wife and posted the status on WhatsApp in Karnataka