கவுன்சிலரை தாக்கிய பெண்கள்: பின்னணியில் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, ஹைதராபாத்தை சேர்ந்த தேதீப்யாராவ் சந்திரசேகர ராவ் கட்சி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் வீட்டுக்கு வெளியே அந்த கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததை தேதீப்யாராவ் மகாராாட்சி மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றினார். 

இதனால் அவரது ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போது தேதீப்யாராவ் காரில் ஏறி செல்ல முயன்றார். 

இதனால் அங்கிருந்த பெண்கள் சிலர் அவரை காருக்குள் புகுந்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினருக்கும் சமாதானம் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telangana womens attacked councilor


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->