ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்.. இடிந்து விழுந்த வீடு..!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோண்டபொச்சம்மா சாகர் கால்வாய் மீறியதைத் தொடர்ந்து சித்திப்பேட்டையில் உள்ள மார்க்கூக் மண்டலத்தின் சிவாரு வெங்கடபூர் கிராமம் கோதாவரி நீரில் வெள்ளம் புகுந்தது. 

கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் பண்ணைகள் வெள்ளத்தில் மூழ்கின. தண்ணீர் நுழைந்ததும் கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் கிராமத்திற்குள் தண்ணீர் நுழைந்ததால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், சித்திப்பேட்டை பாசனத் துறை அதிகாரிகள் நீர் வரத்தை கட்டுக்குள் ஒண்டு வந்துள்ளனர். 

அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana village Flood due to broken pond


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->