கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... ஆசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா கொல்லம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரான ஜோசப் குட்டி என்பவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எனக்கு பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இது பற்றி குழந்தை நல அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியர் ஜோசப் குட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து குழந்தை என்னோட அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோசப் குட்டியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தையடுத்து அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மூன்று பேருக்கும் ஆசிரியர் ஜோசப் குட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teacher arrested for sexually harassing school girls in kerala


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->