டெல்லியில் அசாதுதீன் ஓவைசி வீட்டின் மீது கல்வீச்சு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசி வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தலைநகர் டெல்லி அசோகா சாலையில் உள்ள அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் வீட்டின் மீது நேற்று மாலை 5.30 மணியளவில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமாகி உள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஓவைசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரில், மாலை 5:30 மணியளவில் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதாக எனது வீட்டு உதவியாளர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜெய்ப்பூரில் இருந்து இரவு 11:30 மணியளவில் நான் வீட்டிற்கு வந்தபோது, ஜன்னல் கண்ணாடி உடைந்து கற்கள் கிடப்பதைக் கண்டேன். இதுபோன்ற தாக்குதல் நடப்பது இது நான்காவது முறை என்பதால் உடனடியாக குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கூடுதல் டி.சி.பி., தலைமையிலான டெல்லி போலீசார், அவரது வீட்டிற்கு விரைந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stone pelting attack on Asaduddin Owaisi house in Delhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->