பெண் ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் ஸ்டேட் வங்கி: காரணம் என்ன..?
State Bank plans to increase the number of women employees
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கி நிறுவனமாக ஸ்டேட் வங்கி மும்பை நகரை மையமாக கொண்டு இயங்குகிறது. 22 ஆயிரம் கிளைகளை கொண்டுள்ள இந்த வங்கியில், தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டேட் வங்கி தனது பெண் பணியாளர்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் தனது வங்கியின் பெண் பணியாளர் விகிதத்தை 30 சதவீதமாக உயர்த்த உள்ளதாக ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் கிஷோர் குமார் போலுடாசு தெரிவித்துள்ளார். அதாவது, பாலின சமநிலையை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
State Bank plans to increase the number of women employees