சிறுமி கொலை - சிறப்பு குழு விசாரணை தொடங்கியது.!!
Special team starts investigation in puducherry girl murder
புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணை குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து புதுச்சேரி அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது.
சிறுமி கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்ட சிறப்பு குழு இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது.
சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளிகள் இரண்டு பேர் மற்றும் சந்தேகத்தின் பெயரில் விசாரணையில் உள்ள ஐந்து பேரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று புதுச்சேரியில் முழு அடைப்புக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Special team starts investigation in puducherry girl murder