உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்து பாஜவுக்கு செக் வைத்த சிவசேனா.!.!
shiv sena filed new case in supreme court
மகாராஷ்டிராவில் பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன.
இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கும் வரை தேவேந்திர பட்னாவிஸ் எந்த விதமான கொள்கை முடிவுகளையும் எடுக்க தடை விதிக்க வேண்டும். மேலும் இதுவரையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
English Summary
shiv sena filed new case in supreme court