பஞ்சாப் : பரபரப்பிற்கு மத்தியில் 78 காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது.! முக்கிய புள்ளி தலைமறைவு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம், காலிஸ்தான் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள், அஜ்னாலா பகுதியில் உள்ள காவல்நிலையத்தை சூழ்ந்து சிறையில் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை விடுவிப்பதற்கு முயன்றனர். 

அதுமட்டுமல்லாமல், காவல்நிலையத்தை வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவாளரை விடுவிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வந்தது. 

இது தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி, பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு மத்திய படையை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த கோரிக்கையின் படி, துணை ராணுவப்படையை பஞ்சாப் மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில், போலீசார் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் மற்றும் ஆதரவாளர்களை கைது செய்வதற்கு இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஜலிபூர் ஹைரா கிராமத்தை சுற்றி வளைத்தனர். இருப்பினும், அம்ரித்பால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதையடுத்து போலீசார், காலிஸ்தான் ஆதரவாளர்கள் 78 பேர் கைது செய்தனர். 

மேலும், மாநிலத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்கு நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவைகள்  துண்டிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seventy eight khalistan supporters arrested in punjap


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->