நேபாளத்தில் நிலச்சரிவு - 7 பேர் பலி; 4 பேர் மாயம்.!  - Seithipunal
Seithipunal


நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பாக்லங் மாவட்டத்தின் பதிகத் கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள், உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர். 

இரண்டு வீடுகள் நிலச்சரிவில் அடித்தும் செல்லப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நேபாள போலீசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேருந்துகள் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதில், 7 இந்தியர்கள் உள்ளிட்ட 62 பயணிகள் காணாமல் போனார்கள். இதில் 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seven peoples died and 4 peoples injured for landslide in nepal


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->