அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள் - அரசு பள்ளியில் நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில், தெக்குலபாலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் நேற்று இங்கு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு தயாரித்து ஊழியர்கள் வழங்கி உள்ளனர். இதனை சாப்பிட்ட 64-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உணவில் விஷம் இல்லை என்பதை உறுதி செய்தனர். இருப்பினும் மாணவர்களுக்கு எதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உணவு சமையலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school students admitted hospital in andira


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->