மதுரை | காதலியை வன்கொடுமை செய்து, கம்பி நீட்டிய காதலன்! தட்டி தூக்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


மதுரை : திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் ஒரு பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். 

மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி,  கொடைக்கானல் அழைத்து சென்று தனியாக அறையில் தங்க வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தொடந்து பழங்காநத்தம் பகுதியிலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுப்பு  தெரிவித்துள்ளார். 

இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண் மதுரை அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்துக்கு சென்று நடந்ததை சொல்லி, மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார். 

புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியத்தில், காதலன் மணிகண்டன், அவரது தாயார் மல்லிகா (வயது 55), மைத்துனர் சிவகுமார் (வயது 35) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை மட்டும்கய்து செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள மணிகண்டனின் தாய், மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

raping young girl arrested youth


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->