ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பலி! பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் கோரத்தில் முடிந்த சோகம்! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள் குழு, ஒரு நண்பரின் பிறந்த நாளை கொண்டாட டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றங்கரைக்கு சென்றது.

அப்போது, சிலர் ஆற்றில் நீந்தக் குதித்தனர். எதிர்பாராதவிதமாக அவர்கள் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர். அவர்களை காப்பாற்ற நண்பர்கள் போராடினாலும் பலனளிக்கவில்லை.

இறுதியில் 8 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்று பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் வழங்கினர். விரைவில் கூட்டு மீட்பு குழு சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுத்தது.

மூழ்கியவர்களை மீட்ட மருத்துவர்கள், 8 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan 8 youngster death in river


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->