காய்கறி வியாபாரியுடன் மத்திய உணவு சாப்பிடும் ராகுல் காந்தி! மனம் திறந்து பேசிய வியாபாரி! - Seithipunal
Seithipunal


காய்கறி வியாபாரி ராமேஷ்வர் என்பவருடன் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது, காய்கறி வியாபாரி அவரது கஷ்டத்தை பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது  தொடர்பாக ராகுல் காந்தி பகிர்ந்து கொண்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, 'ஒரு கலகலப்பான மனிதர் ரமேஷ்வர். இந்தியர்களின் இயல்பான காட்சிகளை அவரிடம் காணலாம்' என்று ஹிந்தியில் ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். 

'எந்த நிலைகளிலும் புன்னகையுடன் இருபவர்கள் உண்மையில் பாரத் பாக்ய விதாதா' என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். 

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ரமேஷ்வரும் ராகுல் காந்தியும் பல்வேறு தருணங்களை பகிர்ந்து கொள்வதை காண முடிகிறது. 

வைரலான இந்த வீடியோவில் தனது காலி கை வண்டியுடன் ரமேஷ்வர் காணப்பட்டார். அவர் தக்காளி விலை மிக அதிகமாக உள்ளதால் அதனை வாங்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார். 

இதற்கு ராகுல் காந்தி வேறு ஏதாவது வாங்குவீர்களா என்று கேட்டதற்கு அவர், என்னிடம் காசு இல்லை என்று மனம் உடைந்து தெரிவித்துள்ளார். 

மத்திய அரசுக்கு, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பலர் விலைவாசி உயர்வு குறித்து தெரிவிக்கும் வகையில் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi lunch with vegetable seller


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->