பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிட்டால்...! - சஞ்சய் ரௌத் கருத்து! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என சிவசேனை கட்சியின் எம்.பி சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, ''பிரியங்கா காந்தி வாரணாசி மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். 

அமேதிக்கான போராட்டம் பாஜகவுக்கு கடினமானது. பிரதமர் மோடி மற்றும் நவாஸ் ஷெரீப் சந்திக்க முடியும் என்றால், சரத் பவாரும் அஜீத் பவாரும் ஏன் சந்திக்கக் கூடாது. 

ஆனால் இருவரும் சந்தித்து பேசினர், என்று ஊடகங்கள் மூலம் அறிந்தோம். இந்த சந்திப்பு குறித்து சரத் பாவார் விரைவில் பேசுவார். 

அஜித் பவாரை இந்திய அணி கூட்டத்திற்கு சரத் பவார்  அழைத்ததாக நான் நினைக்கிறேன். அரசியலில் எதுவும் நடக்கலாம். 

மகாராஷ்டிரா மக்கள் தற்போதைய அரசால் மகிழ்ச்சி அடையவில்லை'' என தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மிகச் சிறப்பாக செயல்படும் தகுதியுடையவர். 

அவருக்காக கட்சி சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன் என்று பிரியங்காவின் கணவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Priyanka Gandhi contests against Prime Minister Narendra Modi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->