#BREAKING: புதுச்சேரியில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு - துணை நிலை ஆளுநர்.!
PONDICHERRY EXTEND LOCKDOWN TILL 7 JUNE 2021
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகாண் நகரில் கொரோனா வைரஸ் உருவாகி பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது.
பின்னர், வைரஸின் தாக்கம் மெல்ல குறைந்தவுடன் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. இதனால், பலரும் உயிருக்குப் போராடி அன்றாடம் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், மக்கள் ஊரடங்கு உத்தரவுகளை கடைபிடித்து, கொரோனா பரவலை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PONDICHERRY EXTEND LOCKDOWN TILL 7 JUNE 2021