விளையாட்டு திடலிலும் ஆபரேஷன் சிந்தூர் - பிரதமர் மோடி பகிர்ந்த செய்தி! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

தன் எக்ஸ் தளப் பதிவில் அவர், “விளையாட்டு திடலிலும் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது. முடிவு ஒன்றே, இந்தியா வெற்றி பெற்றது. வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டு” என்று குறிப்பிட்டார்.

துபாயில் நடைபெற்ற இந்த ஆசியக் கோப்பை இறுதியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது. இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இந்த சாதனையால் இந்திய அணி 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று, சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தது. மேலும் லீக் சுற்று, சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டி என பாகிஸ்தானை எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆசிய கிரிக்கெட் வட்டாரத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது.

 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi Asia cup T20


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->