முகநூலில் பழகிய சிறுமி.! திருமணம் செய்துகொள்ள அழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சிறுவன் உள்பட 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காள மாநிலத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் சுந்தர்பன் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், அதே மாவட்டத்தில் தோலாஹாட் பகுதியை சேர்ந்த சிறுவனுடன் முகநூல் வழியே நட்பாக பேசி வந்துள்ளார். 

நாளடைவில் இந்த பேச்சு காதலாக மாறியது. இதையடுத்து, சிறுவன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்து, அவரை கொல்கத்தா நகருக்கு வரும்படி அழைத்துள்ளார். இந்த நிலையில், சிறுமியின் தாயார் தோலாஹாட் காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் படி, தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார், சிறுமியை கொல்கத்தாவில் உள்ள தர்மதல்லா நகரில் மீட்டனர். அதன் பின்னர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தன. அப்போது அவர் அளித்த தகவலின்பேரில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த விவகாரம் தொடர்பாக, காவல் அதிகாரி பிஸ்வஜித் நஸ்கார் தெரிவித்ததாவது, "சிறுமியை கொல்கத்தாவிற்கு அழைத்து வந்த சிறுவன் அவரை, ஹூக்ளியில் ஆரம்பாக் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஜைதுல் ஷேக் என்பவரிடம் ரூ.40 ஆயிரம் பணம் பெற்று கொண்டு விற்றுள்ளார்" என்றுத் தெரிவித்தார். 

இதையடுத்து, அந்த சிறுமி தன்னை ஆரம்பாக் ஓட்டல் மற்றும் பல்லிகஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near west bengal three peoples arrested for sexual harassment case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->