திருமணம் செய்துகொள்ள மறுத்த பள்ளி மாணவிக்கு கொலை மிரட்டல் - இளைஞர் கைது.!
near uttara pradesh young man arrested for Intimidation school student
கடந்த மே மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தாவை, அவரது காதலனான அப்தாப் டெல்லியில் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசியெறிந்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்ததனால் நாடு முழுவதும் பரபரப்பாக இருந்தது.
இந்த சம்பவம் முடிவுக்கு வருவதற்குள், உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் பள்ளி சிறுமியை 'துண்டு துண்டாக வெட்டிவிடுவேன்' என்று இளைஞன் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம் ஷமன்கஞ்ச் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளியில் படித்து வருகிறார். இந்த சிறுமி பள்ளிக்கு செல்லும்போது அவரை அதேபகுதியை சேர்ந்த 21 வயதான முகமது பைஸ் என்ற இளைஞர் பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்தது மட்டுமல்லாமல், தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு அந்த சிறுமி மறுத்ததனால், கோபமடைந்த பைஸ், திருமணம் நடைபெறவில்லையென்றால் உன்னை துண்டுதுண்டாக வெட்டிவிடுவேன்' என்று அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது பைஸ்-ஐ கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு, முகமதுவின் குடும்பத்தினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கிடையே மோதல் அதிகரித்த நிலையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த முகமது பைசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
near uttara pradesh young man arrested for Intimidation school student