தவறான உறவிற்கு மறுப்புத் தெரிவித்த மைத்துனர்.! ஆத்திரத்தில் இளம்பெண் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள டோர்னக்கல் புறநகர் தாண்டா பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் மனைவி குமாரி. இதில், கோபி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால், குமாரி மாமியார் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அப்போது, குமாரிக்கு கோபியின் அண்ணன் ராஜுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 

ஆனால், இந்தத் தொடர்பில் உடன்பாடு இல்லாத ராஜு, இது தவறான உறவு என்று குமாரியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், குமாரி கணவர் இல்லாத ஆசையை நிறைவேற்ற கோரி அடிக்கடி ராஜூவிற்கு தொந்தரவு கொடுத்து வந்தார். இதற்கு ராஜு மறுப்புத் தெரிவித்து வந்ததனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்றது. 

இதனால், குமாரி ராஜூவை கொலை செய்ய முடிவு செய்து, அதற்காக இரண்டு வாலிபர்களை அழைத்து வந்தார். அதன் படி, குமாரி தூங்கிக் கொண்டு இருந்த ராஜுவை கல்லால் தாக்கி கொலை செய்தார். அதன் பின்னர், அவர் அந்த வாலிபர்கள் உதவியுடன் ராஜுவின் உடலை பள்ளம் தோண்டி புதைத்துள்ளார்.

சில நாட்களாக ராஜு காணாததால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குமாரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், முதலில் மறுத்து பேசிய அவர் பின்னர் உண்மையை கூறினார். 

இதைக்கேட்டு, ஆத்திரமடைந்த கிராம மக்கள் குமாரியை சராமாரியாக அடித்து உதைத்து, பின்னர் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர். 

இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரியை கைது செய்தனர். மேலும், குமாரி கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் மைத்துனரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near telungana woman arrested for murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->