பஞ்சாப் : ஒன்றுடன் ஒன்று மோதிய ஆட்டோ மற்றும் கார் - 4 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் அட்டாரி சாலையில் வேகமாக வந்த காரும், ஆட்டோவும், ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் காயமடைந்தனர்.

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து பார்த்து போலீசாருக்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

மேலும் காயமடைந்த ஐந்து போரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் இந்த விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆட்டோவும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near punjap amirtasar four peoples died for auto car accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->