புத்தாண்டு கொண்டாட்டம் : ஓட்டலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் ஜீஹு நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஓட்டலுக்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வந்திருந்தார். 

அங்கு சனிக்கிழமை இரவு முதல் நடன நிகழ்ச்சிகள் ஆட்டம், பாட்டம் என்று கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் புத்தாண்டு பிறந்தவுடன் அதிகாலை மூன்று  மணியளவில் சிறுமி நடமனாடிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த ஓட்டலுக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் சிறுமியுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். 

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய இளைஞர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இது தொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். 

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஓட்டல் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையறிந்து தப்பிச்செல்ல முயன்ற இளைஞரை ஓட்டல் ஊழியர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி, அங்கு விரைந்து வந்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharashtra youth arrested for sexuall harassment in hotel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->