கர்நாடகா  : காதல் லீலையால் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் அகாடி கிராமத்தை சேர்ந்தவர் விருபாக்ஷப்பா - பாரதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு கிரண், அருண் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். 

அவர்களில் கிரானுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சவுஜன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதைதொடர்ந்து, அருணும், அதே கிராமத்தைச் சேர்ந்த புட்டண்ணஷெட்டி என்பவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு புட்டண்ணஷெட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அருணும், அவருடைய காதலியும் வீட்டில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புட்டண்ணஷெட்டியும் அவருடைய உறவினர்களும் சேர்ந்து தங்களது மகளை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூறி அருண் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். 

இதனால், மனம் உடைந்து போன அருண் குடும்பத்தினர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஹாவேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனால் மனம் நொந்து போன விருபாக்ஷப்பா, புட்டண்ணஷெட்டியும், அவரது குடும்பத்தினரும் கொடுத்த தொல்லையால் தான் மூன்று பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹாவேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka three peoples sucide in same family


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->