கடனைத் திரும்ப கேட்டு கட்டி வைத்து கொடுமைபடுத்திய குடும்பம்.! தீவிர தேடுதலில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அடுத்து சாத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். 42 வயதுடைய இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அம்பலம் மகன் ராஜேஸ் என்பவரிடம் ரூ. 1 லட்சம் கடனாக வாங்கி இருந்தார். 

இந்தக் கடனுக்காக ராமன் மாதந்தோறும் வட்டி மட்டும் கட்டி வந்துள்ளார். இதற்கிடையே ராமன் தனது சொந்த ஊரில் சரியாக வேலை இல்லாததால் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சாத்தம்பாடிக்கு வந்தார். 

இதை பார்த்த ராஜேஷ் குடும்பத்தினர் ராமனை பிடித்து வந்து மரத்தில் கட்டி வைத்து பணத்தை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். பணத்தைதராமல் இந்த இடத்திலிருந்து  நகர முடியாது என்று ராமனின் மனைவியிடம் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து ராமன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மரத்திலேயே கட்டி வைக்கப்பட்டிருந்தார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். 

இதைத்தொடர்ந்து, ராமன் மனைவி ஜோதிமணி தனது கணவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கந்து வட்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேசை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள அவரது பெற்றோர் அம்பலம் மற்றும் சாந்தியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near dindukal family members harassment for man not return loan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->