3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை...! போலீசார் விசாரணை...! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தின் மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குறித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கோஹந்தவுர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அவுரங்காபாத் நர்ஹர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சோகன்லால். இவர் மும்பையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது பிரமிளா தேவி (35). இவர்களது குழந்தைகள் சோனாலி (7), ஷிவான்ஷ் (5), திவ்யான்ஷ் (1). இந்நிலையில் நர்ஹர்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் பிரமிளா தனது மூன்று குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து கிணற்றில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணின் பிணம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூன்று குழந்தைகள் மற்றும் பெண்ணின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், மோகன்லால் வேலை பார்க்கும் மும்பைக்கு தன்னையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்லும்படி பிரமிளா கணவரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு மோகன்லால் மறுப்பு தெரிவித்து வந்ததால், விரக்தியில் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பிரமிளா தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother commits suicide by jumping into well with 3 children in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->