மங்களூருவில் விநோத பொருளை விற்பனை செய்த 3 வாலிபர்கள்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, மங்களூர் மாநகர குற்றப்பிரிவு போலீசார் பணம்பூர் கடற்கரை பகுதியில் ரோந்து பணிக்காக சென்ற போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். 

போலீசார் அவர்களை உடனடியாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திமிங்கல உமிழ்நீர் எனப்படும் அம்பர்கிரிசை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. 

மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் உடுப்பி சாலிகிராமத்தை சேர்ந்த ஜெயகரா (வயது 39), சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா (வயது 25) மற்றும் சிகான் பகுதியைச் சேர்ந்த லோகித் குமார் என்பது தெரியவந்தது.

போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 900 கிராம் எடை கொண்ட ரூ. 90 லட்சம் மதிப்புள்ள திமிங்கலம் உமிழ்நீரை மங்களூர் மாநகர போலீசார் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mangalore 3 youths arrested


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->