கேரளாவில் அதிர்ச்சி : வந்தே பாரத் ரெயில் முன்பு பாய்ந்து ஒருவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் அதிர்ச்சி : வந்தே பாரத் ரெயில் முன்பு பாய்ந்து ஒருவர் தற்கொலை.!

கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வியாழக்கிழமை தவிர வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது. இதையடுத்து இந்த ரெயில் கோழிக்கோட்டை அடுத்து எலத்தூர் அருகே வந்து கொண்டிருந்த போது தண்டவாளத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி அவர்கள் விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த ஆசாமி ரயிலில் பாய்ந்ததால் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. இதையடுத்து அந்த ரெயில் திருவனந்தபுரத்திற்கு சென்ற பின்னர் சரி செய்யப்பட்டது. 

இதற்கிடையே ரெயில்வே போலீசார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நபர் யார்? எதற்காக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன்மீது கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறிவந்த நிலையில், தற்போது கேரளாவில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man sucide jump front of vande barat train in kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->