அதிகாலையிலேயே அதிர்ச்சி.. உடற்பயிற்சியின் போது சரிந்து விழுந்த வாலிபர் உயிரிழப்பு.!
man died for heart attack at gym in uttar pradesh
அதிகாலையிலேயே அதிர்ச்சி.. உடற்பயிற்சியின் போது சரிந்து விழுந்த வாலிபர் உயிரிழப்பு.!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகர் சரஸ்வதி விஹாரில் உடற்பயிற்சி கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உடற்பயிற்சி கூடத்தில் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்த சித்தார்த் என்பவர் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தார்.
அங்கு சித்தார்த் திரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென நின்று சுயநினைவை இழந்து அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயிற்சியாளர்கள் சித்தார்த்துக்கு முதலுதவி செய்தனர்.

அதன் பின்னர், அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உடற்பயிற்சிக்கு கூடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man died for heart attack at gym in uttar pradesh