சோகம்.. புலித் தாக்கி முதியவர் பலி.!! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள பலஹட் மாவட்டம் கண்ட்வா கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் பனி. முதியவரான இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் தனது தோட்டத்திற்கு சென்று விவசாய பணி செய்துகொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த புலி ஒன்று பிரகாசின் தலை, கழுத்து, முதுகு பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த பிரகாஷ் கதறியுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அப்பகுதி மக்கள் கற்கள், கட்டைகளை கொண்டு புலியை விரட்டியடித்தனர்.

அதன் பின்னர் படுகாயமடைந்த பிரகாசை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பிரகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், புலியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கிராம மக்கள் திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man died for attack tiger in madhya pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->