ராஜஸ்தான் : மூதாட்டியை அடித்து கொன்று நர மாமிசம் உண்ட இளைஞர் கைது.!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் : மூதாட்டியை அடித்து கொன்று நர மாமிசம் உண்ட இளைஞர் கைது.!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி மாவட்டம் சர்தானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி தேவி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்காக ஒட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் சாந்தி தேவியை கல்லால் அடித்துள்ளார். 

இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அந்த இளைஞர் மூதாட்டியின் உடலை கிழித்து நர மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தார். இதற்கிடையே அந்த வழியாக வந்த மூதாட்டியின் மகன் பிரேன் இளைஞர் நர மாமிசம் சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து பயந்து ஓடி, ஊர் மக்களை அழைத்து வந்துள்ளார். 

அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞரை கைது செய்தனர். 

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், நர மாமிசத்தை சாப்பிட்ட நபர் மும்பையை சேர்ந்த சுரேந்திர தாக்கூர் என்றும், இவர் ராபீஸ் நோய் பாதிப்பு ஆளான நாயால் கடிக்கப்பட்டு இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. 

மேலும், சுரேந்திரா மும்பையில் இருந்து பேருந்து மூலம் ராஜஸ்தான் வந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சுரேந்திரா மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவ சோதனையும் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill old lady in rajasthan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->