தகாத உறவுக்குத் தடையாக இருந்த குழந்தை.!! கொதிக்கும் நீரில் நனைத்து கொன்ற சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தகாத உறவுக்குத் தடையாக இருந்த குழந்தை.!! கொதிக்கும் நீரில் நனைத்து கொன்ற சம்பவம்.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் கோலேகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், விக்ரம் கோலேகர் கிரணை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு கிரண் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், கிரணின் குழந்தைதான் தங்களின் உறவுக்கு தடையாக இருப்பதாகக் கருதி குழந்தையை சூடான கொதிக்கும் நீரில் நனைத்து கொன்றுள்ளார். 

இந்த கொடூர சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து கிரணிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு கதறி அழுத்த கிரண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். 

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை கொலை செய்த விக்ரமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவுக்கு தடையாக இருப்பதாக குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for kill baby in pune


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->