மதுபான ஊழல்: முன்னாள் அமைச்சரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
Liquor scam chhattisgarh asset freeze Enforcement Directorate
சத்தீஸ்கரில், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை (ED) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கான தொடர்ச்சி நடவடிக்கையாக, சுக்மா மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் பவன் அலுவலகம், முன்னாள் அமைச்சர் கவாசி லக்மாவின் ராய்ப்பூர் இல்லம் மற்றும் அவரது மகன் ஹரீஷ் கவாசியின் வீடு உள்ளிட்ட ரூ.6.15 கோடி மதிப்புள்ள சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒரு அரசியல் கட்சியின் சொத்துகள் முற்றிலும் முடக்கப்படும் இது முதல் நிகழ்வாகும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை “பா.ஜ.க-வின் அரசியல் பழிவாங்கல்” என சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சி கண்டித்து, “அலுவலக கட்டிடத்திற்கு வந்த ஒவ்வொரு ரூபாயையும் பதிவு செய்து வைத்திருக்கிறோம்” என்று பதிலளித்துள்ளது.
English Summary
Liquor scam chhattisgarh asset freeze Enforcement Directorate