பள்ளி பாடத்திட்டத்தில் "போக்சோ சட்டம்".!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.!!
KeralaHC directs CentralGovt to respond on POCSO act including in school books
பள்ளி மாணவர்களிடையே போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கேரளா அரசு முடிவு செய்துள்ளது. பள்ளி மாணவர்களின் பாலியல் உறவு தொடர்பான வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அடுத்த கல்வியாண்டு முதல் போக்சோ சட்டம் குறித்தான பாடங்கள் பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெறும் என கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதனை ஏற்றுக் கொண்ட கேரள உயர்நீதிமன்றம் பள்ளி மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு காரணம் போக்சா குறித்து விழிப்புணர்வு இல்லாதது என கருத்து தெரிவித்தோடு இது குறித்து உரிய பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை கேரள உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
English Summary
KeralaHC directs CentralGovt to respond on POCSO act including in school books