கேரள பெண் மருத்துவ மாணவி தற்கொலை: கிடைத்த உருக்கமான கடிதம்!  - Seithipunal
Seithipunal


கேரளாவில் பெண் மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா, திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பயின்று வந்த மாணவி ஷஹானா (வயது 26). 

இவர் அதே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி பயின்று வந்தார். இந்நிலையில் ஷஹானா இரவு பணிக்கு வராத நிலையில் சக தோழிகள் சந்தேகம் அடைந்து அவர் தங்கி இருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு ஷஹானா மயங்கிய நிலையில் கிடந்தார்.

 

உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷஹானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் தங்கி இருந்த அறையில் ஷஹானா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், அனைவருக்கும் பணம் தேவை. பணம் எல்லாவற்றையும் வெல்லும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

பின்னர் போலீசார் இது தொடர்பாக ஷஹானா குடும்பத்தினரை விசாரணை நடத்தினர். அப்போது ஷஹானாவுக்கும் அவரது நண்பருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மணமகன் வீட்டார் அதிக வரதட்சனை கேட்டதால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 

இதன் அடிப்படையில் கல்லூரியில் முதுகலை மருத்துவராக இருக்கும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala female medical student commits suicide


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->