சென்னையில் தொடர் மழை : கிண்டியில் உள்ள கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் தொடர் மழை : கிண்டியில் உள்ள கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடல்.!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்றிரவில் இருந்து சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையால் கிண்டி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. 

அதேபோல், சென்னை, புறநகரில் பெய்த மழையால், காலை நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா பாலத்தின் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. 

இந்த சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்தத் தொடர் மழையால் சென்னையில் இதுவரை எட்டு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. அதாவது, செம்பியம், கொளத்தூர், தலைமைச் செயலகம், மைலாப்பூர், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளதால் அவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புதுறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kaththipara tunnel close for heavy rain


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->