மதம் மாற்ற முயற்சித்த பெண்., கட்டிய மனைவி, பெற்ற பிள்ளையை கணவன் செய்த சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


வேறொரு மதத்திற்கு மாறி விடுவார்கள் என்ற அச்சத்தில் கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளையையும் கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம், மங்களூர் பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் நாகேஷ். இவருக்கும் இவருடைய மனைவி விஜயலட்சுமிக்கும் அடிக்கடி மதம் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

மேலும் நாகேஷின் வீட்டுக்கு கடந்த மாதங்களாக ஒரு மாற்று மதத்தை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் வந்து செல்வதும், அவர் விஜயலட்சுமியை மதமாற்றம் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று, நாகேஷின் வீட்டின் கதவு வெகுநேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக வீட்டியின் உள்ளே பார்த்துள்ளனர்.

அப்போது, வீட்டின் உள்ளே நாகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவரவே, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அக்கம்பக்கத்தினருக்கும் மேலும் அதிர்ச்சி காத்து இருந்தது. வீட்டின் உள்ளே ஒரு அறையில் விஜயலட்சுமி மற்றும் அவரது இரு குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.

இதனையடுத்து சம்மபவ் இடத்துக்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், நாகேஷ் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், "என் மனைவி விஜயலட்சுமியை ஒரு பெண் மதம் மாற்ற முயற்சிப்பதால், அவர் மதம் மாறிவிடுவார் என்ற அச்சத்தில், மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்றுவிட்டு, தான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, விஜயலட்சுமியை மதம் மாற்ற முயற்சித்த அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka total family suicide for religion change


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->