கர்நாடகத்தில் புகையிலை புகைக்க வயது வரம்பு 21 ஆக உயர்வு – புதிய சட்டம் அமல்!
Karnataka tobacco cigarette age limit 21
கர்நாடக அரசு, புகையிலை உபயோக வயது வரம்பை 18 இலிருந்து 21 ஆக உயர்த்தும் சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ அரசாணையாக வெளியிட்டுள்ளது.
இதன் படி, 21 வயதிற்கு குறைவானோர் எந்தவொரு பொது இடத்திலும் புகைப்பிடிக்கவும், புகையிலை எச்சில் துப்பவும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுவது சட்டஊழியர்களால் கைதுக்கு வழிவகுக்கும்.
இதேவேளை, 30 அறைகளையோ அல்லது 30 இருக்கைகளையோ கொண்ட ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தனி புகைப்பிடிக்கும் இடம் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
முக்கியமாக, ஹூக்கா பார்கள் செயல்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 21 வயதிற்கு குறைவானோருக்கு புகையிலை தயாரிப்புகளை விற்பனை செய்தால் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
English Summary
Karnataka tobacco cigarette age limit 21