700 அடி பள்ளம்... ஜம்மு காஷ்மீர் ராணுவ வாகனம் கோர விபத்து! 3 வீரர்கள் பலி! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் ஒரு ஆழமான பள்ளத்தில் தவறி விழுந்த கோர விபத்தில் மூன்று வீரர்கள் உயிரிழந்த துயரமான நிகழ்வு நடந்துள்ளது.

இந்த சம்பவம், ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்திலுள்ள பட்ரேரி சாஷ்மா பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் நிகழ்ந்தது. வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம், சாலையை விட்டு விலகி சுமார் 700 அடி ஆழமுள்ள பள்ளத்திலே மூழ்கியது.

தகவல் அறிந்தவுடன் ராணுவம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மூன்று வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

உயிரிழந்த வீரர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jammu and Kashmir Soldiers road accident 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->